×

திருச்செங்கோட்டில் இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு,  ஜன.30: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,  என்ஆர்சி, என்பிஆர் தயாரிப்பதை நிறுத்தக்கோரியும், வருகிற பிப்ரவரி 2ம்  தேதி முதல் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இதற்கான  அனைத்து கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்கும்  ஆலோசனை கூட்டம் இன்று (30ம்தேதி) காலை 11மணிக்கு திருச்செங்கோடு  சிஎச்பி.காலனியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்   நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய  கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன்  முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழா் பேரவை ஆகிய கட்சி தலைவர்கள், செயலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, நாமக்கல் மேற்கு  மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : party consultation meeting ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்