×

கொய்யா சந்தையில் நிலவேம்பு குடிநீர்

பழநி, ஜன. 30:பழநி அருகே ஆயக்குடி கொய்யா சந்தையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் பலருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. தவிர, பழநி பகுதியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகளவு இருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சிறப்பு காவல்படை போலீசார், காந்தி மார்க்கெட் வியாபாரிகள், உழவர் சந்தை என பல இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பழநி அருகே ஆயக்குடி கொய்யா சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவமனையின் டாக்டர்.மகேந்திரன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார். மேலும், காய்ச்சல் அறிகுறி, தடுக்கும் முறை, சிகிச்சை முறை, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்