×

போக்குவரத்துக்கு இடையூறாக கடை அமைத்த 4 பேர் கைது

திருப்பூர், ஜன.30:திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பி.என். ரோட்டிலுள்ள ஒரு தனியார் பேக்கரி கடை பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து திருப்பூரை சேர்ந்த சுல்தான் (30) என்பவரை கைது செய்தனர். இதே போல் 60 அடி ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக கடை அமைத்த திருப்பூரை சேர்ந்த தோபிக் (23), ராம் (26). நெசவாளர் காலனி பஸ் நிறுத்தம் அருகே கடை அமைத்த சுடலை (30) ஆகிய 4 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...