×

பாலக்காடு அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது

பாலக்காடு, ஜன. 30:   பாலக்காடு அருகே மூன்று லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காரில் கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.   பாலக்காடு டவுண் வடக்கு போலீஸ் எஸ்.ஐ. சதீஷ் தலைமையில் போலீசார் கோழிக்கோடு பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வட மாநிலப்பதிவு எண் கொண்ட காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.  இதில் கார் சீட்டிற்கு அடியில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த ஆசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்கர் மெகபூப் (19), முகமது சூர்குசேன் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தி கார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Palakkad ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது