×

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்


சிவகங்கை, ஜன. 28: சிவகங்கையில் மதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஜெயப்ரகாஷ், ஆசைத்தம்பி, குருதங்கபாண்டியன், செல்வராஜ், நாச்சியப்பன், தீபன்சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், மாநில மகளிரணி செயலாளர் ரொஹையா, மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார்கண்ணன் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முத்துச்சாமி, மனோகரன், சார்லஸ், பாண்டியராஜன், குணசேகரன், மல்லிகா மனோகரன், மணிமாறன், முத்தையா, கருத்தபக்கீர், இளமுருகு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நகர் இளைஞரணி செயலாளர் சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

Tags : Heroic Day Public Meeting ,
× RELATED நாமக்கல்லில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்