கரூர், ஜன. 28: கரூர் நகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையில் கனரக வாகனங்கள் நிறுத்தம் காரணமாக பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார், பிஎஸ்என்எல் அலுவலகம், மார்க்கெட், மாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் மக்கள் பாதையின் வழியாக செல்கின்றனர். மேலும் மக்கள் பாதையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இந்நிலையில் இந்த பகுதி சாலையோரம் கனரக வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் பிற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை இந்த பகுதியில் அடிக்கடி நிலவி வருகிறது. எனவே இந்த பகுதியில் வாகன நிறுத்தத்தை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.