×

சேந்தமங்கலம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை

சேந்தமங்கலம், ஜன.24: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி ரெட்டி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேலு. இவரது மகள் சந்தியா (24). இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார். இந்நிலையில், சந்தியாவுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. பெற்றோர் அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அழைத்தும் குணமடையவில்லை. நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த சந்தியா, பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். மதியம் வீட்டுக்கு வந்த பெற்றோர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்தியா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,Sethamangalam ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...