×

அரியலூர் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

அரியலூர், ஜன. 24: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் 100வது ஆண்டு விழாவையொட்டி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் தொழில்நுடப் கல்லூரி, பாராமெடிக்கல் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. அரியலூர் கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

Tags : competitions ,Ariyalur district ,
× RELATED நெல் வயலில் பாசி கட்டுப்பாடு...