×

காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை, ஜன.24: மதுரை மாவட்ட வழங்கல் துறை சார்பில் மாவட்ட அளவிலான எரிவாயு உருளை (காஸ் சிலிண்டர்) பயன்படுத்தும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், காஸ் ஏஜென்ஸி உரிமையாளர்கள், மேலாளர்கள், கலந்து கொண்டு, நுகர்வோர் கேட்கும் கேள்விக்கு பதில் கூற உள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை நேரிலோ அல்லது மனுவாக தெரிவிக்கலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags : Cause Consumer ,
× RELATED காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்