×

காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர், ஜன.22: திருவாரூர் மாவட்ட காஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதில் நுகர்வோருக்கு உள்ள குறைபாடுகளை சரி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை (23ந்தேதி) மாலை 4.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொள்ள உள்ளதால் மாவட்டத்தில் உள்ள எரிவாயு வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து எரிவாயு விநியோகம் சீராக நடைபெறத் தேவையான ஆலோசனைகளை வழங்கலாம் இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Cause Consumer ,
× RELATED காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்