விருதுநகர், ஜன.23: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டிகள் 20 வயதிற்குள், 21 முதல் 40 வயதிற்குள், 41 முதல் 50 வயதிற்குள், 51 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் ஆனந்த் ஆச்சாரி துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கல்லூரி செயலர் முருகன், பொருளாளர் பெரியசாமி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ், பரிசுத் தொகை, கோப்பைகளை வழங்கினர்.