×

கண்மாயில் மூழ்கி சிறுவன் சாவு

விருதுநகர், ஜன. 22: விருதுநகர் அருகே, நந்திரெட்டியாபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஈஸ்வரன் (9), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வந்த அவன், நண்பன் மோகனுடன் சௌந்தரேஸ்வரர் கண்மாயில் குளிக்கச் சென்றான். கண்மாயில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற ஈஸ்வரன் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற விருதுநகர் ரூரல் போலீசார் ஈஸ்வரனின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை