×

சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு அடிப்படை, முன்னோடி பயிற்சி வகுப்பு

ஆரணி, ஜன.22: ஆரணியில் சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி வகுப்பை மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.ஆரணி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், தெள்ளார் ஆகிய ஒன்றியங்களில் உள்ள சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா ஆரணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இதில் ஆரணி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலை பாஸ்கர், பொருளாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அந்தோணி மரியசெல்வம் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். இதில் பயிற்சியாளர்கள் சீனிவாச வரதன், கமலக்கண்ணன், கலைமதி, ரூத்பேபி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வரும் 25ம் தேதியன்று (சனிக்கிழமை) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் சான்றுகளை வழங்க உள்ளார்.

Tags : workshop ,teachers ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்