அறந்தாங்கி, ஜன.22: அறந்தாங்கி அருகே அனுமதிஇன்றி மணல் ஏற்றி சென்ற மாட்டுவண்டியை பறிமுதல் செய்த போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.அறந்தாங்கி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு, அழியாநிலை பஞ்சுமில் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெள்ளாற்றில் இருந்து அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த அழியாநிலையைச் சேர்ந்த கணேசன்(35) என்பவரை கைது செய்து மாட்டுவண்டி மற்றும் கால் யூனிட் மணலை பறிமுதல் செய்தார்.