×

காட்சி பொருளான தானியங்கி குடிநீர் கருவி

கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவின்போது சுமார் ₹5 லட்சம் மதிப்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தானியங்கி கட்டண சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி திறக்கப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தியதும் குடிநீர் தானாக கிடைக்கும் வகையில் இந்த கருவி செயல்பட்டு வந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் மிகுந்த பயனடைந்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்த கருவி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகமும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியமும் இணைந்து ஆட்டோமேடிக் ஆர்ஓ கருவியை நிறுவியது. இதன்மூலம் குறைந்த விலையில் குடிநீர் வழங்கியதை பிடிக்காத சில சமூக விரோதிகள் கருவியை பழுதாக்கிவிட்டனர். எனவே, இந்த குடிநீர் கருவி பழுதை நீக்கி ஒகேனக்கல் காவல் நிலையம் அருகிலோ அல்லது தீயணைப்பு நிலையம் அருகிலோ அமைத்தால் பாதுகாப்பாக இருப்பதோடு குறைவான விலையில் ஒகேனக்கல் குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் என கூறினர்.

Tags :
× RELATED கடும் வெயிலால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்