×

ஊத்தங்கரை அருகே பைக்கில் கொண்டு சென்ற பெட்ரோல் தீப்பிடித்தது

ஊத்தங்கரை, ஜன.20: ஊத்தங்கரை அருகே வாட்டர் கேனில் பெட்ரோல் எடுத்து சென்ற வாலிபரின் பைக் தீடீரென திப்பிடித்ததில், அவர் தீயில் கருகினார். தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சக்திவேல்(27). இவர் நேற்றிரவு திருப்பத்தூரில் இருந்து, ஊத்தங்கரையை நோக்கி தனது பைக்கில் சென்றபோது, வாட்டர் கேனில் பெட்ரோல் எடுத்து வந்துள்ளார். காரப்பட்டு அருகே வந்தபோது, பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்ததில், பைக் திடீரென தீப்பிடித்தது. இதில், சக்திவேல் உடலில் பற்றிய தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேல் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uttankarai ,
× RELATED ஊத்தங்கரை ஒன்றிய குழு கூட்டம்