×

சந்தப்படுகை கிராமத்தில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா

கொள்ளிடம், ஜன.20: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி நேற்று கோலப்போட்டி நடைபெற்றது. சந்தப்படுகை சாந்தமுத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கோலப்போட்டியில், குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள பெண்கள் கலந்து கொண்டு பல வகையான வண்ணங்களில் கோலமிட்டனர். 200க்கும் மேற்பட்ட கோலங்களில் முதல் மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Golapotti Gifting Ceremony ,
× RELATED தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக...