×

பொன்னமராவதியில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு

பொன்னமராவதி, ஜன.19: பொன்னமராவதியில் 70அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையினை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவனூர் கிராமத்தில் பழனியப்பன் என்பவரின் ஜல்லிக்கட்டுக்காளை அவரது 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் மேய்ச்சலுக்காக சென்றபோது தடுமாறி விழுந்தது. இதுகுறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுப்பட்டது. உடனடியாக சம்பஇடத்திற்கு சென்று தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...