×

நத்தம் கோர்ட்டில் பொங்கல் கொண்டாட்டம்

நத்தம், ஜன. 14: நத்தத்தில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நீதிபதி கலையரசி ரீனா தலைமை வகித்து பொங்கல் வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், வைர வசுந்தரம், தலைமை எழுத்தர் முத்துகிருஷ்ணன் மற்றும் அனைத்து வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். நீதிமன்றத்தின் முன்புறம் கரும்பு, வாழைமரம் தோரணம் அமைக்கப்பட்டு பாரம்பரியப்படி பொங்கல் வைத்து குலவையிட்டனர்.

Tags : celebration ,Nadam Court ,
× RELATED எதிர்கால தமிழ்நாட்டிற்கான...