×

பைக் விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ₹19.50 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 13:  சென்னையை சேர்ந்தவர் பாபு (18). இவர், கடந்த 27.9.2018 அன்று சகாயராஜ் என்பவருடன் சென்னையில் இருந்து தடா நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். ஆக்காம்பேட்டை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, சகாயராஜ் பிரேக் பிடித்துள்ளார். அதில், பின்னால் அமர்ந்திருந்த பாபு தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் மகனின் இறப்புக்கு இழப்பீடு கோரி, பாபுவின் பெற்றோர் ராஜேந்திரன், அஞ்சாமணி ஆகியோர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி உமாமகேஷ்வரி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த பாபுவுக்கு 18 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து மாதம் ₹15 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது இறப்பு பெற்றோர்களுக்கு கடும் இழப்பாகும். எனவே மனுதாரர்களுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ₹19.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : victim ,bike accident ,
× RELATED ராகிங் கொடுமைக்கு மாணவர் பலி;...