புதுக்கோட்டை, ஜன.13: புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் மற்றும் மாவட்ட திருவருள் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் சீனு.சின்னப்பா தலைமை தாங்கினார். இதில் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் தீபாசங்கரி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி பேசினார். இதில் வர்த்தக கழக மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சவரிமுத்து, பொருளாளர் கதிரேசன், கூடுதல் செயலாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.