×

சாலையில் இறந்து கிடந்த ஆண் மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

குளித்தலை, ஜன.13: குளித்தலை அருகே சாலையில் இறந்து கிடந்த ஆண்மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. குளித்தலை அருகே திருச்சி கரூர் புறவழிச்சாலையில் சாலையில் அடிபட்ட இறந்த நிலையில் ஆண் மயில் ஒன்று கிடந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலினிடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த விஏஓசம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் இருந்த மயிலை கைப்பற்றி சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு அவரிடம் ஒப்படைத்தார்.

விபத்து பிரசார வாகனம்
புதிய நகரப்பேருந்துகள் துவக்க விழாவினை தொடர்ந்து, மற்றொரு புதிய முயற்சியாக சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விபத்து பிரசார வாகன இயக்கமும் துவக்கி வைக்கப்பட்டது. பல்வேறு சாலை பாதுகாப்பு தகவல்கள் இந்த வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்து இல்லாத நிலையை உருவாக்குவது, பல்வேறு சாலை பாதுகாப்பு தகவல்கள் போன்றவற்றுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனம், கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : forest department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...