×

திருவில்லி.ஒன்றிய தலைவர் தேர்வு

திருவில்லிபுத்தூர், ஜன. 12: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் திமுக  வெற்றி பெற்றுள்ளது. நேற்று ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. கலால் உதவி ஆணையர் முருகன், தேர்தல் அதிகாரி சிவகுமார், உதவி தேர்தல் அதிகாரி முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 4வது வார்டில் வெற்றி பெற்ற மல்லி ஆறுமுகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த  கவுன்சிலர்கள் தலா ஒருவரும், சுயேச்சையும் ஆதரவு அளித்தனர். திருவில்லிபுத்தூர் நகர திமுக செயலாளர் அய்யாவு பாண்டியன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் செல்வமணி, திமுக முக்கிய நிர்வாகிகள் வெங்கட்ராமன்,  மல்லி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உட்பட திமுகவினர் மல்லி  ஆறுமுகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Thiruvilli ,
× RELATED திருவில்லியில் இன்று மின்தடை