×

ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் கீழ்வேளூர் ஒன்றிய துணை தலைவராக திமுகவை சேர்ந்த புருஷோத்தமன் வெற்றி பெற்றார். தலைஞாயிறு ஒன்றிய துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் வெற்றி பெற்றார். மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மகேஸ்வரி வெற்றி பெற்றார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அறிவழகன் வெற்றி பெற்றார். திருமருகல் ஒன்றியக்குழு துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த திருமேனி வெற்றி பெற்றார். கீழையூர் ஒன்றிய துணைத்தலைவராக சுயேட்சை உறுப்பினர் சௌந்தர்ராஜன் வெற்றி பெற்றார்
செம்பனார்கோவில் ஒன்றிய துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த பாஸ்கர் வெற்றி பெற்றார். நாகை ஒன்றிய துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த மலர்விழி வெற்றி பெற்றார். கொள்ளிடம் ஒன்றியம் துணை
தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பானுசேகர் வெற்றி பெற்றார். குத்தாலம் ஒன்றியம் துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த முருகப்பா வெற்றி பெற்றார்.
சீர்காழி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 5 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

Tags : Election ,Vice President ,Union Committee ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்