உடுமலை,ஜன.12: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில், காந்திய சிந்தனை ஊர்வலம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். மாணவி உமா வரவேற்றார். இயற்பியல் ஆசிரியர் ரத்தினசாமி ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியாக 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் காந்திய சிந்தனை பற்றி விளக்கினார். சர்வோதய பொருட்களை வாங்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. மாணவி வான்மதி நன்றி கூறினார்.