×

குருடம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணிப்பு

பெ.நா.பாளையம், ஜன.12: கோவை துடியலூர் அருகே உள்ளது குருடம்பாளையம் ஊராட்சி நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை சேர்ந்த, ரவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று துணை தலைவருக்கான தேர்தல் நடந்தது.
இதில் அதிமுக சார்பில் வசந்தாமணியும், திமுக சார்பில் கோகிலாவும் போட்டியிட்டனர். வாக்கு பதிவு நடக்கும் இடத்தில் அ.தி.முகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி அழகர் ராஜனிடம் திமுக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து விதிமுறைகள் மீறப்படுவதாகூறி திமுக உறுப்பினர்கள் கோகிலா, ஜெயகுமார் சுரேஷ்குமார், சுமதி ஆகிய நான்கு பேரும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின வசந்தா மணி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

Tags : IGP ,election ,Vice President ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!