×

இந்திய கம்யூ. எச்சரிக்கை தரகம்பட்டி பகுதியில் சாலையோர மணல் திட்டுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

கடவூர், ஜன. 10: தரகம்பட்டியில் சாலையோரங்களில் இருக்கும் மணல் திட்டுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை உடனே அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரகம்பட்டியில் பழைய கடவூர் தாலுகா அலுவலகம் எதிரில் கரூர்-மணப்பாறை சாலையில் மணல் திட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. அந்த இடம் வளைவு பகுதியாக இருப்பதால் பேருந்துகள் வரும்போது டூவிலரில் செல்பவர்கள் அந்த மணல் திட்டுகளில் மீது ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் பைக்குகள் நிலை தடுமாறுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்நிலையில் மழை பெய்தால் சாலையோரங்களில் மணல் தேங்கி நிற்கிறது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடவூர் தாலுகா

Tags : road accidents ,sand dunes ,
× RELATED தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க...