×

எருமப்பட்டி அருகே கார் மோதி விவசாயி பலி

சேந்தமங்கலம், ஜன.10: எருமப்பட்டி அடுத்துள்ள ஏ.மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா(50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன், தனது இருசக்கர வாகனத்தில்  வளையப்பட்டியில் இருந்து எருமப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பண்ணை ரோடு  என்ற இடத்தில் எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்  தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, ராஜா சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார்  வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : car collision ,Erumpatti ,
× RELATED ங்காயம் விலை உயர்வு