×

திருக்காட்டுப்பள்ளியில் 4,461 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 10: திருக்காட்டுப்பள்ளியில் 4,461 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.திருக்காட்டுப்பள்ளி கூட்டுறவு பண்டகசாலை மூலம் திருக்காட்டுப்பள்ளியில் கடை எண் 1ல் 597, கடை எண் 2ல் 711, ஒன்பத்துவேலி கடை எண் 1ல் 807, கடை எண் 2ல் 785, மைக்கேல்பட்டி கடையில் 873, புதுச்சத்திரம் கடையில் 270, நடுப்படுகை கடையில் 217, கூடநாணல் கடையில் 197 ஆக 4461 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி மற்றும் ரூ.1,000 ஆகியவை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. பண்டக சாலை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
திருவையாறு நிலவள வங்கி துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஒன்பத்துவேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கார்த்திகேயன், வீட்டு வசதி சங்க தலைவர் ராஜாங்கம், வீஏஒ பாஸ்டின் முன்னிலை வகித்தனர். பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி துவக்கி வைத்தார். பண்டகசாலை மேலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Tags : Pongal ,family card holders ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...