×

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி, ஜன. 10:   மயிலம் அருகே செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளர்மதி(45), ரவி (38) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர். அப்போது திருச்சி பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் கடந்த 6ம் தேதி நடந்த சாலை விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து நடந்த விபத்தில் 4 பேர் இறந்ததால் கிராம பொதுமக்கள் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.  தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொடர்ந்து சாலை விபத்து நடப்பதால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


Tags : road ,bridge ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...