×

பொங்கல் பரிசுதொகுப்பு வழங்க கடலூரில் இருந்து சிக்கலுக்கு 6,500 செங்கரும்புகள் வந்தது

கீழ்வேளூர், ஜன.9: சிக்கலில் உள்ள 22 ரேஷன் கடைகளுக்கு 6,500 கரும்புகள் கடலூரில் இருந்து வந்திறங்கியது. நாகை மாவட்டம் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள 22 ரேசன் கடைகளில் உள்ள 12,100 குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசு பொருளுடன் செங்கரும்பு வழங்க தேவையான கரும்புகள் கடலூர் மாவட்டத்தில் இருந்து 6,500 கரும்புகள் லாரிமூலம் நேற்று காலை சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்தது. இதையடுத்து இந்த கரும்புகள் ரேசன் கடைகளுக்கு இரண்டு குடும்ப அட்டைக்கு ஒரு கரும்பு என பிரித்து பொங்கள் பரிசு பொருட்களுடன் நேற்று மாலை அனுப்பப்பட்டது. கூட்டுறவு வங்க தலைவர் தங்ககதிரவன், செயலாளர் கலியமூர்த்தி, துணைத் தலைவர் காளிமுத்து மற்றும் சங்க ஊழியர்கள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Cuddalore ,Pongal ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி