×

அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.2கோடியே 12 லட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை

நாகை, ஜன.9: நாகை மாவட்டத்தில் அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய இடங்களில் அம்மா மருந்தகங்கள் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்கள் மூலம் 2017 -2018ம் ஆண்டில் விற்பனை ரூ.44.80 லட்சம் ஆகும். 2018 -2019ம் ஆண்டில் விற்பனை ரூ.51.61 லட்சம் ஆகும். 2019 -2020ம் ஆண்டில் விற்பனை ரூ.35.19 லட்சம் ஆகும். அம்மா மருந்தகங்கள் மூலம் மொத்த விற்பனை ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கு 12 முதல் 20 சதவீதம் வரை மருந்துகள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

Tags : Amma Pharmaceuticals ,
× RELATED மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம்...