×

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் இடிந்து விழும் வீடுகளை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜன.9: புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமவத்துவபுரம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரம் வீடுகள் திமுக ஆட்சியில் இருந்தபோது அதன் தலைவர் கருணாநிதி முற்போக்கான சமத்துவபுர திட்டத்தை செயல்படுத்தி பணிகள் முடிக்கப்பட்டு வீடு இல்லாத ஏழை எளிய குடும்பங்களுக்கு சாதி பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதனால் இந்த சமத்துவ புரத்திற்கு பெரியார் சமத்துவ புரம் என்று பெயரிடப்பட்டது. மேலும் சமத்துவ புரத்தில் தனியாக ரேஷன் கடைகள், குடிநீர் வசதி, கலையரங்கம், சமூதாய கூடம் என அனைத்து வசதிகளையும் செய்து தரப்பட்டது. இதனால் இந்த பகுதியில் அதிகமான ஏழை எளிய மக்கள் குடியேர தொடங்கினர். இந்த குடுயிருப்புகள் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் போதிய பராமரிப்பு இன்றி தற்போது சேமதடைய தொடங்கியுள்ளது. இதனால் இந்த குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் பெருத்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து சமத்துவ புரம் குடியிருப்புகளை மராமத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : demolition ,houses ,Samawathapura ,Pudukkottai district ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்