×

ராசிபுரத்தில் ஆய்வு பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

ராசிபுரம். ஜன.8: ராசிபுரத்தில், ₹55 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். ராசிபுரம் நகராட்சி பகுதியில் ₹55 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கி, கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை கலெக்டர் மெகராஜ் திடீரென ஆய்வு செய்தார். இதில், 9 ஆயிரத்து 200 இணைப்புகளில் இதுவரை 650 இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது  தெரிய வந்தது. விரைவில் அனைத்து இணைப்புகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு  கலெக்டர் உத்தரவிட்டார்.  இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஒருசில இடங்களில் தனியார் நிலங்கள் வழியாக செல்வதால் பிரச்னை உள்ளது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரையிலும் பாதாள சாக்கடை திட்டபணிகள்  95 சதவீதம் வரையிலும் முடிவடைந்துள்ளது. அனைத்து பணிகளும் இன்னும் 2 மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்படும் என்றார்.

Tags : Collector ,completion ,Rasipuram ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...