×

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வென்ற 349 உறுப்பினர்கள் பதவி ஏற்பு

பொன்னமராவதி,ஜன.7: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 349 உறுப்பினர்கள் பதவியேற்றனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் 2 மாவட்டக்குழு உறுப்பினர்கள், 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 42 ஊராட்சி மன்ற தலைவர்கள், 291 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இரண்டாம் கட்டமாக கடந்த 30ம்தேதி நடைபெற்றது. தொடர்ந்து 2ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 16 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் 9 திமுக உறுப்பினர்கள், 6 அதிமுக உறுப்பினர்கள், 1 சுயேச்சையும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 1 சுயேச்சை உறுப்பினரும் திமுகவில் இணைந்தார். இதன்மூலம் திமுகவில் தற்போது 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதையடுத்து பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடைக்கலமணி, சுதா, தனலெட்சுமி, ஆதிலெட்சுமி, முருகேசன், பழனிச்சாமி, சிவரஞ்சனி, பிரியங்கா, விஜயா, பழனியப்பன், வளர்மதி, பழனியாண்டி, மாணிக்கம், அழகுரத்தினம், கல்யாணி, சுந்தரராஜன் என்ற செந்தில் உள்ளிட்டோர் பதவியேற்றனர். தேர்தல் அலுவலர்கள் கிருஷ்ணன், வேலு, சுவாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்தனர். மேலும், பொன்னமராவதி 42 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்றனர். இரண்டு மாவட்டக்கவுன்சிலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்திலும் பதவியேற்றுள்ளனர். ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல், ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.

Tags : Ponnamaravathi Panchayat Union ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ