×

கோட்டார் அருகே பாதாளசாக்கடை மேன்ஹோல் மூடி உடைந்தது விபத்து ஏற்படும் அபாயம்

நாகர்கோவில், ஜன. 3:  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை பணி நடந்து வருகிறது. பாதாளசாக்கடைக்கு போடப்படும் மேன்ஹோல்கள் மூடிகள் உரிய தரமில்லாமல் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்ட் ரோடு பகுதியில் போடப்பட்டு இருந்த மேன்ஹோல்மூடி உடைந்து காணப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய பிறகு அந்த மேன்ஹோல் மூடி புதிதாக போடப்பட்டது. அண்ணாபஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் சவேரியார் ஆலயம் ஜங்சன் பகுதி வழியாக பல வாகனங்கள் சென்று வருகிறது.

கவிமணி பள்ளி அருகே சாலையில் போடப்பட்டு உள்ள பாதாளசாக்கடை மேன்ஹோல் மூடி உடைந்து காணப்படுகிறது. மேன் ஹோலில் மூடியில் உள்ள காங்கிரிட்டுகள் உடைந்து கம்பிகள் மட்டும் வெளியே தெரிந்து கொண்டு இருக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கவனக்குறைவாக வந்தால் விபத்தில் சிக்கும் நிலை இருந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடைந்து போன மேன்ஹோல் மூடியை மாற்றி புதிதாக போடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotar ,
× RELATED அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில்...