×

வாக்கு எண்ணும் மையம் அருகே காட்டு மாடுகள் வந்ததால் பொது மக்கள் ஓட்டம்

குன்னூர், ஜன. 3: குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டு மாடுகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் வாக்கு எண்ணும் மையம் அருகே 10க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதனை தொடர்ந்து அதிரடி படை, காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : public ,polling station ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...