×

பிரமாண்ட கேக் திருவிழா துவக்கம் மேலப்பாளையத்தில் இருந்து வெள்ளாளப்பட்டி செல்லும் வழியில் விவசாய நிலத்தில் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் மின் கம்பம்

கரூர், டிச. 31: கரூர் மேலப்பாளையம் பகுதியில் இருந்து வெள்ளாளப்பட்டி செல்லும் சாலையோரம் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் இருந்து புலியூர் சாலையான வெள்ளாளப்பட்டி பகுதி வரை சாலையோரம் விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளன.

இந்நிலையில் விவசாய நிலத்தையொட்டி சிமெண்ட் துகள்கள் சிதிலடைந்து, சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இதில் இருந்து விவசாய பகுதிகளுக்கு தேவையான மின்சாரமும் சப்ளை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. விழும் நிலையில் உள்ள இதனை பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் சில மாதங்களாக கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது என கூறப்படுகிறது. எனவே எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : cake festival ,farmland ,Melappalai ,Wellapatti ,
× RELATED பண்ணைப்புரம் கிராம பகுதிகளில் மழை வளம் தரும் மரங்களை நட வேண்டும்