×

மனைவி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை

பழநி, டிச. 31: பழநியில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பழநி அடிவாரம், பூங்கா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (32). இவரது மனைவி மதி (26). திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதி கோபமடைந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த லோகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : plaintiff ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை