×

அம்பேத்கார் நகரில் ஆட்டம் காணும் ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

பட்டிவீரன்பட்டி, டிச. 31: பட்டிவீரன்பட்டி அம்பேத்கார் நகரில் உள்ள ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பட்டிவீரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகரில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் குழந்தைகள் மையம் அருகே, சுமார் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலைகுடிநீர் தொட்டியிலிருந்து அண்ணாநகர், அம்பேத்கார் நகர் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டி தரமான முறையில் கட்டப்படாததால் சேதமடைந்து வருகிறது. குடிநீர் தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகள் இடிந்துள்ளன.

Tags : Ambedkar ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...