×

மாணவியை பலாத்காரம் செய்த மாணவர் போக்சோவில் கைது

நாமகிரிப்பேட்டை, டிச.30: மாணவியை பலாத்கரம் செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், ராசிபுரம் அருகே அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஆர்.பி.காட்டூர் பகுதியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இருவரும், நெருங்கி பழகினர். இதில், அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி வசந்த்திடம் மாணவி கூறிய போது, கர்ப்பத்தை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே, மாத்திரையை சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து மாணவியின் தாத்தா, நாமகிரிபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், அந்த மாணவர், தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். இதன் பேரில், ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் விசாரணை நடத்தி, மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Tags : Student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...