×

பிப்ரவரி 28ம்தேதி கடைசி பக்தர்கள் மகிழ்ச்சி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையால் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்

நாகை, டிச.30: டாஸ்மாக் கடைகள் தொடர் விடுமுறை எதிரொலியால் கீழ்வேளூர் பகுதியில் பாக்கெட் சாராயம் ஜோராக விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஊராக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுவதால் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை வந்துவிட்டது. ஆனால் கனஜோராக நடைபெறும் பாக்கெட் சாராயம் விற்பனையை போலீசாரால் தடுக்க முடியவில்லை. கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் பகுதியில் இரவு, பகல் என்று எந்தநேரமும் பாக்கெட் சாராயம் கிடைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மது கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள போலீசார் மதுபானங்கள் கடத்தலை தடுக்கின்றனர். ஆனால் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை நடைபெறுவதை தடுக்க முடியவில்லை. கீழ்வேளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதுச்சேரி மாநில சாராயம் குடிதண்ணீர் கிடைப்பது போல் மிகவும் எளிதாக கிடைக்கிறது. இதை மதுவிலக்கு போலீசாராலும் தடுக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட எல்லையில் உள்ள போலீசாராலும் தடுக்க முடியவில்லை என்று வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Pocket Liquor Sales Jour ,Holidays ,Last Devotees Happy Task Shop ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...