×

டூவீலரில் இருந்து கீழே விழுந்த பெண் பலி

மேலூர், டிச. 30: மேலூர் அருகே மகனுடன் டூவீலரில் வந்த பெண் தடுமாறி கீழே விழுந்து பலியானார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் அப்பாஸ் (40). இவரது தாயார் சாதுநிஷா (60)வை தனது டூவீலரில் ஏற்றிக் கொண்டு மேலூர் கீழவளவில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக வந்து கொண்டிருந்தார். இ.மலம்பட்டியை அடுத்த அரசு பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் சாதுநிஷா தடுமாறி கீழே விழுந்தார்.இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Duveler ,
× RELATED நடுவழியில் பயணிகள் தவிப்பு பயணிகளை...