பொன்னமராவதி,டிச.30:பொன்னமராவதியில் இன்று நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பெட்டிகள் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவுள்ள2ம் கட்ட உள்ளாட்சித்தேர்தலுக்கு பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 168பூத்துக்களுக்கு வாக்குப்பெட்டி மற்றும் வாக்குப்பதிவுக்கான தளவாடப்பொருட்கள் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் புதுக்கோட்டை, அன்னவாசல், திருமயம், அறந்தாங்கி,மணல்மேல்குடி,கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் வந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொன்னமராவதி லயன்ஸ் பள்ளியில் அதற்கான ஆணை வழங்கப்பட்டது. பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள 2மாவட்டக்கவுன்சிலர்கள், 16ஒன்றியக்கவுன்சிலர்கள், 42கிராம ஊராட்சித்தலைவர்கள், 291ஊராட்சி உறுப்பினர் என 351 பதவிகளுக்கு 880வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் இன்று நடக்கின்றது.