திருச்செங்கோடு, டிச.29: மோகனூர் மேற்கு ஒன்றியம் நன்செய் இடையாறு ஊராட்சியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ நேற்று தீவிர வாக்கு சேகரித்தார். உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், மோகனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நன்செய் இடையாறு ஊராட்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்குக்கு போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.