கூடலூர், டிச. 27: கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை தெரிந்த முழு சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட கிளை சார்பில் கூடலூர் காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அறிவியல் இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு சோலார் கண்ணாடிகள் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். மேலும் பந்துகளில் பொருத்தப்பட்ட கண்னாடிகளின் மூலம் அதன் பிம்பத்தை சுவற்றில் பிரதிபலித்து, சூரிய கிரகணம் பார்க்க வசதி செய்யப்பட்டது. வளைய சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. இது வாழ்நாளில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.