×

மேலூர் அருகே சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

மேலூர், டிச. 25: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே உள்ள சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள  சங்கரலிங்கம்,  சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடுகள் நேற்று நடைபெற்றது.

மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், உலக அமைதி வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உட்பட பல அபிஷேகங்கள் நடைபெற்றது.
பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Shivalaya ,Melur ,
× RELATED மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும்...