×

சேடபட்டி அருகே மாணவியை கொலை செய்த சகோதரர்களுக்கு குண்டாஸ்

பேரையூர், டிச. 25:  சேடபட்டி அருகே 11ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த சகோதரர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம் பெருங்காமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஓணாப்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த பால்பாண்டி மதுரை செல்லூரில் வசித்துவருகிறார்.

இவரது மகள் சந்தியா(16) மதுரையில் 11ம் வகுப்பு படித்து வந்தவர், ஓணாப்பட்டியிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு புரட்டாசி பொங்கல் திருவிழாவிற்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த அக்.13ந் தேதி மாலை தோட்டத்திற்கு குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் எங்கேயும் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அக்.14ந் தேதி ஓணாப்பட்டி அருகே மலையிலுள்ள கள்ளிப்புதருக்குள் சந்தியா காயங்களுடன் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் பேரையூர் டி.எஸ்.பி.மதியழகன் தலைமையிலான போலீசார் ஓணாப்பட்டியைச் சேர்ந்த அம்மாசி மகன்கள் மது(23) மற்றும் மாதவன்(23) ஆகிய இரட்டை சகோதர்கள் தான் கொலை செய்தனர் என்பதனை கண்டறிந்து இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் பரிந்துரையில் மாணவியை கொலை செய்த மது மற்றும் மாதவனுக்கு குண்டாஸ் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒருவருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பேரையூர் டி.எஸ்.பி., மதியழகன் மற்றும் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : brothers ,student ,Setapatti ,
× RELATED சங்ககிரி அருகே கழுகை விரட்ட...