×

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

தஞ்சை, டிச. 25: தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தாய் நாட்டுக்காக ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் வரும் 26ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்திற்கு முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Local Election Protection Mission: Calling Former Veterans ,
× RELATED குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணி