×

தேர்தல் பாதுகாப்பு பணியில் மாஜி படை வீரர்கள் பங்கேற்க அழைப்பு

கிருஷ்ணகிரி, டிச.24:உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் பங்கேற்க முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில், சிறப்பு பாதுகாப்பு அலுவலர்களாக பணிபுரிய, முப்படையில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு, நாளை( 25ம்தேதி) காலை 7 மணிக்கு, தங்களுக்கு தேவையான 6 நாட்களுக்கு உண்டான உடமைகள், குளிர்காலம் என்பதால் போர்வை மற்றும் ராணுவ சீருடை, ராணுவ அசல் படைவிலகல் சான்று மற்றும் முன்னாள் படைவீரர் அடையாள அட்டை போன்றவற்றுடன் ஆஜராக வேண்டும். தமிழக அளவில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறப்பாகவும், அதிக எண்ணிக்கையிலும் கலந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். எனவே, இந்த தேர்தலிலும் முன்னாள் படைவீரர்கள் திரளான கலந்துகொண்டு பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Maj ,Soldiers ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி